பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நடமாடும் சதொச விற்பனை நிலையம்
பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு சதொச நிறுவனம் நடமாடும் விற்பனை நிலையங்களை ஆரம்பித்துள்ளது.
வவுனியாவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரி கலாநிதி எஸ்.எச்.எம்.பராஸ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்; தெரிவித்தார். சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பு இதன் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக