காபுல் தற்கொலை தாக்குதல் பலியானோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு, 150 பேர் காயம் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-01-28

காபுல் தற்கொலை தாக்குதல் பலியானோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு, 150 பேர் காயம்

காபுல் தற்கொலை தாக்குதல்   பலியானோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு, 150 பேர் காயம்



ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ள நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150 க்கும் அதிகமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பழைய அலுவலகத்திற்கு அருகே இன்று பிற்பகல் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

ஆம்பியூலன்ஸ் வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தததாகவும் சுமார் 150 பேர் படுகாயம் அடைந்தததாகவும் ஆரம்பத்தில் செய்திகள் தெரிவித்தன.

படுகாயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் இந்த தாக்குதலில் பலியனோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டது.


தற்போதைய நிலவரப்படி இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. சோதனைச் சாவடி ஒன்றை கடந்து சென்ற குறித்த ஆம்பியூலன்ஸ் வாகனத்தின் டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளியொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அடுத்த சோதனைச் சாவடியை நெருங்கியபோது திடீரென்று வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்க பதுக்கி வைத்திருந்த குண்டுகளை வாகனத்தின் சாரதி வெடிக்கச் செய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages