ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பதானுக்கு தற்காலிகத் தடை - Today News

Today News

Today News

Breaking News

W

2018-01-10

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பதானுக்கு தற்காலிகத் தடை

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பதானுக்கு தற்காலிகத் தடை



இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பிற்காக போராடி வரும் யூசுப் பத்தான் பயன்படுத்திய மருந்து ஒன்றில் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து இருந்தது தெரியவந்ததையடுத்து தற்காலிகமாக போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இருமல் மருந்துகளில் பொதுவாகக் காணப்படும் ‘டெர்புடலைன்’(terbutaline) என்ற மருந்துப்பொருள் உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துப் பட்டியலில் இருப்பதாகும்.

கடந்த மார்ச் 16ஆம் திகதி உள்ளூர் இருபதுக்கு-20 தொடரின் போது யூசுப் பத்தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் ஊக்கமருந்து தடுப்புச் சோதனைக்காக சிறுநீர் மாதிரியை அளித்திருந்தார்.

பரிசோதனையில் டெர்புடலைன் இருந்தது தெரியவந்ததையடுத்து இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் வரை தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யூசுப் பத்தானிடம் இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விளக்கம் கேட்டபோது, தனக்கு பரிந்துரை செய்யப்பட்ட மருந்துக்குப் பதிலாக டெர்புடலைன் உள்ள மருந்து தவறாகக் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages