சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லக்ஷ்மிபதி பாலாஜி நியமனம்
2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லக்ஷ்மிபதி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் இம்முறை போட்டியில் களமிறங்கவுள்ளன.
முதல் 8 தொடர்களிலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராகவிருந்த தோனியையும் ரெய்னா, ஜடேஜா ஆகியோரையும் இம்முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துக்கொண்டுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீபன் பிளமிங் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லக்ஷ்மிபதி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக