மரக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் செயற்திட்டம் ஜனாதிபதி தலைமையில் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-01-03

மரக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் செயற்திட்டம் ஜனாதிபதி தலைமையில்

மரக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் செயற்திட்டம் ஜனாதிபதி தலைமையில்



ஜனாதிபதி செயலக ஆளணியினருக்கு மரக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் செயற்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

மலர்ந்துள்ள புதிய ஆண்டில் சுற்றாடல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம், தமது நாளாந்த நுகர்வுக்கு பொருத்தமானவற்றை தமது வீட்டுத் தோட்டத்திலேயே பயிர் செய்து கொள்ளல் வேண்டுமென்ற செய்தியை அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கும் பொருட்டு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஜனாதிபதி செயலக ஆளணியினர் 2018ஆம் ஆண்டில் கடமைகளை ஆரம்பித்ததை தொடர்ந்து இந்த செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஹன கீர்த்தி திசாநாயக்க உள்ளிட்ட சிலருக்கு பழ மரக்கன்றுகளை வழங்கினார்.  

பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் ஏனையோருக்கு பழக் கன்றுகளை பகிர்ந்தளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages