ஒரே நாளில் 2 படங்களின் அறிவிப்புகள்: உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-07

ஒரே நாளில் 2 படங்களின் அறிவிப்புகள்: உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்

நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், நயன்தாரா நடிக்கும் அடுத்த 2 படங்களின் அறிவிப்பு ஒரே நாளில் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டோரா, அறம், வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் வௌியாகின.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹாபடத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், நயன்தாராவின் `இமைக்கா நொடிகள்’, `கோலமாவு கோகிலாபடங்களின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளன.



த்ரில்லர் கதையாக உருவாகும் `கொலையுதிர் காலம்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.



இதுதவிர, அறிவழகன் இயக்கும் த்ரில்லர் கதையிலும், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக `நரசிம்ம ரெட்டிபடத்திலும் நடிக்கிறார். இன்னொரு தெலுங்குப் பட வாய்ப்பும் வந்திருக்கிறது.

இந்நிலையில், நயன்தாரா நடிக்கவிருக்கும் அடுத்த இரு படங்கள் குறித்த அறிவிப்பு நேற்று ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, நயன்தாரா அடுத்ததாக அஜித் ஜோடியாக `விஸ்வாசம்படத்திலும், `லெக்ஷ்மி’, `மாகுறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் த்ரில்லர் கதையிலும் நடிக்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது. `

விஸ்வாசம்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages