8,325 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு ஒருகோடி 58 இலட்சம் பேர் வாக்களிப்பு - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-10

8,325 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு ஒருகோடி 58 இலட்சம் பேர் வாக்களிப்பு


Share
நாட­ளா­விய ரீதியில் 340 உள்­ளூ­ராட்சி மன்­றங்­­ளுக்கு   8325 மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­­தற்­கான   உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இன்று நடை­பெ­று­கின்­றது
 22  தேர்தல் மாவட்­டங்­களின் மொத்­­மாக 1 கோடியே 57 இலட்­சத்து 60 ஆயி­ரத்து 860 வாக்­கா­ளர்கள்  வாக்­­ளிக்க தகு­தி­பெற்­றுள்­ளனர்

தேர்தல் களத்தில் 57 ஆயி­ரத்து 256 வேட்­பா­ளர்கள்  உள்ள நிலையில்  இன்று தேர்தல் நடை­பெ­று­கின்­றது.  

தேர்தல் மற்றும் வாக்­­ளிப்பு கட­மை­களில் ஒரு இலட்­சத்து 75 ஆயிரம் அரச உத்­தி­யோ­கஸ்­தர்கள் மற்றும் 65 ஆயி­ரத்து 758 பொலி­ஸாரும்  ஈடு­­டுத்­தப்­பட்­டுள்­ளனர்
இன்­றைய தினம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில்  வாக்­­ளிப்பு காலை  7.00 மணி­முதல் மாலை 4.00 மணி­வரை இடம்­பெறும்
நாட்டின் 22 தேர்தல் மாவட்­டங்­களில் மொத்­­மாக   13, 374 வாக்­­ளிப்பு நிலை­யங்கள்  மக்கள் வாக்­­ளிப்­பிற்­காக   நிறு­வப்­பட்­டுள்­ளன.340 உள்­ளூ­ராட்சி சபை­களில் 24  மாந­­­­பை­­ளுக்கும்,  41 நக­­­பை­­ளுக்கும் 276 பிர­தேச சபை­­ளுக்­கும்­மான தேர்­­லாக இடம்­பெ­று­கின்­றது. இதில்   60 வீதம் வட்­டார அடிப்­­டை­யிலும்  40 வீதம் விகி­தா­சார  அடிப்­­டை­யிலும் பிர­தி­நி­திகள் தெரி­வு­செய்­யப்­­­வுள்­ளனர்
இன்று நடை­பெறும்  உள்ளூ­ராட்சி மன்ற தேர்தல் வாக்­­ளிப்பு இடம்­பெறும் நிலை­யங்­களில் கைய­டக்க தொலை­பேசிப்  பயன்­பாடு முற்­றாக தடை­செய்­யப்­பட்­டுள்­ளது
மக்கள் வாக்­­ளிப்பு நிலை­யங்­­ளுக்குள் செல்லும் போது தமது அடை­யாள அட்டை மற்றும் தேர்தல் வாக்­காளர் அட்டை என்­­வற்றை மாத்­திரம் கொண்­டு­செல்ல முடியும்
அனா­­சி­­மான செயற்­பா­டு­களில் ஈடு­படும் நபர்கள் தொடர்பில் நட­­டி­க்கைகள் எடுக்­கப்­படும்குறித்த பகு­தியில் கைய­டக்க தொலை­பே­சியை பயன்­­டுத்தல், காணொளி எடுத்தல் , புகைப் 
படம் எடுத்தல், புகைத்தல் மது­பானம் அருந்­துதல் என்­பன தடை­செய்­யப்­பட்­டுள்­ளது
உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் வாக்­­ளிக்கச் செல்வோர் தமது அடை­யா­ளத்தை உறு­திப்­­டுத்­து­­தற்­காக  தேசிய அடை­யாள அட்டை, செல்­லு­­டி­யான கடவுச் சீட்டு, செல்­லு­­டி­யான சாரதி அனு­மதிப் பத்­திரம், அரச சேவை ஓய்­வூ­திய அடை­யாள அட்டை, பிர­தேச செய­லா­­ரினால் வழங்­கப்­பட்ட முதியோர் அடை­யாள அட்டை, ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­­ளத்­தினால் வழங்­கப்­பட்ட மத­கு­ரு­மார்­­ளுக்­கான அடை­யாள அட்டை, தேர்தல் செய­­கத்­தினால்  வழங்­கப்­பட்ட விசேட அடை­யாள அட்டை ஆகிய   அட்­டை­களில் ஏதே­னு­மொன்றை சமர்ப்­பிக்­கா­விடின்  வாக்­­ளிக்க முடி­யாது.  
 தெளி­வில்­லாத அடை­யாள அட்­டைகள் (புகைப்­­டத்தின் மூலம் ஆள்  அடை­யாளம் காண முடி­யா­தாயின் அல்­லது பெயர் வாசிக்க முடி­யா­­வாறு அழிந்­தி­ருப்பின்) அமைச்­சுக்­­ளினால் அல்­லது திணைக்­­ளங்­­ளினால் மற்றும் அரச நிறு­­னங்­­ளினால் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்ள அலு­­லக அடை­யாள அட்­டைகள் அல்­லது தேசிய அடை­யாள அட்­டைக்கு விண்­ணப்­பிக்­கின்ற போது வழங்­கப்­படும் பற்­றுச்­சீட்டு போன்ற புகைப்­­டத்­துடன் கூடிய அல்­லது புகைப்­படம் இல்­லாத எந்த  ஆவ­ணமும் வாக்­கெ­டுப்பு நிலை­யத்தில் ஏற்றுக் கொள்­ளப்­­டாது
தேர்தல் பாது­காப்பு நட­­டிக்­கை­­ளுக்கும் தேர்தல் நட­­டிக்­கை­­ளுக்­கு­மாக பொலி­ஸாரும் விசேட அதி­­டிப்­­டை­யி­னரும் உள்­­டங்­­லாக 65ஆயி­ரத்து 758  பேர் கட­மையில் ஈடு­­டுத்­தப்­பட்­டுள்­­தாக பொலிஸ்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளதுதலா  4 நட­மாடும் பாது­காப்பு சேவைகள் இடம்­பெ­று­­துடன்தேர்தல் முடி­வு­களை வெளி­யிடும் 25 மத்­திய நிலை­யங்­களில் பொலிஸார் கட­மையில் ஈடு­­டுத்­தப்­­­வுள்­­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்
நடை­பெ­­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் வாக்­­ளிப்­பிற்­காக இலங்கை போக்­கு­­ரத்து சபை 1337 பஸ்­களை தேர்தல் பணி­­ளுக்­காக வழங்­கி­யி­ருப்­­தாக தேர்­தல்கள் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது
இந்த பஸ்கள் மூலம் தேர்தல் அதி­கா­ரிகள் வாக்கு பெட்­டி­களை எடுத்துச் செல்­­தற்கு பாது­காப்பு பிரிவு பணி­­ளுக்­காக இந்த பஸ்கள் பயன்­­டுத்­தப்­படும்.
தேர்­தலில் வாக்­கா­ளர்­­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­­டு­கின்ற வாக்­குச்­சீட்டில் போட்­டி­யி­டு­கின்ற கட்­சி­களின் பெயர்­களும் சின்­னங்­களும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் போட்­டி­யி­டு­­தாயின் சுயேச்சைக் குழு­வென்ற சொற்­றொ­­ரோடு அடை­யாளம் காட்டும் இலக்­கங்கள் மற்றும் சின்­னங்கள் மாத்­தி­ரமே அச்­சி­டப்­பட்­டி­ருக்கும்
வேட்­பா­ளரின் பெயர்கள் அல்­லது இலக்­கங்கள் அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­­மாட்­டாது
எனவே வாக்­கினை நீங்கள் அளிக்­கின்ற போது, உங்­­ளுக்கு விருப்­­மான கட்­சியின் பெயர், சின்னம் அல்­லது குழுவின் பெயர் மற்றும் சின்னம் உள்ள நிரலில் சின்­னத்­துக்கு வலப்­பு­­மா­­வுள்ள கூட்டில் ஒரே­யொரு புள்­­டியை (x) என புள்­ளடி இட­வேண்டும்
வாக்குச் சீட்டில் வேறெந்த சின்­னத்தை இடு­­தையோ அல்­லது வரை­­தையோ அல்­லது எழு­து­­தையோ கட்­டா­­மாக தவிர்த்துக் கொள்­ளுதல் வேண்டும்
ஏனெனில் பல்­வேறு அடை­யா­ளங்­களை வரைதல், அடை­யா­­மிடல், வாக்­கா­ளரை அடை­யாளம் காணச் செய்­­தற்­கான ஒரு முயற்­சி­யாகக் கொள்­ளப்­பட முடி­யு­மென்­­தாகும்
ஆகவே  உங்­­ளுக்கு விருப்­­மான கட்­சியின் அல்­லது குழுவின் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிர­லி­லுள்ள அக்­கட்­சியின் அல்­லது குழுவின் சின்­னத்­திற்கு வலப்­பு­­மாக உள்ள வெற்றுக் கூட்டில் ஒரே­யொரு புள்­­டியை (X) மாத்­திரம் இட்டு உங்கள் வாக்­குகளை அளிக்க வேண்டும்
மாவட்ட ரீதி­யாக வாக்­கா­ளர்கள் 
மாவட்ட ரீதியில் வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்­கையை பொறுத்­­வரை  கொழும்பு மாவட்­டத்தில்   1,652,389 பேரும்கம்­பஹ மாவட்­டத்தில்  - 1,724,309 பேரும்களுத்­துறை மாவட்­டத்தில்  - 941,742 பேரும்கண்டி மாவட்­டத்தில் - 1, 097,342 பேரும்மாத்­தளை மாவட்­டத்தில்  - 395,786 பேரும்,
நுவ­ரெ­லியா  மாவட்­டத்தில் -562, 025 பேரும்காலி மாவட்­டத்தில் - 848,877 பேரும்மாத்­­றை மாவட்­டத்தில்  - 644,800 பேரும்அம்­பாந்­தோட்டை  மாவட்­டத்தில் - 479,498 பேரும்யாழ்ப்­பாணம் மாவட்­டத்தில்  - 555,210 பேரும்வன்னி மாவட்­டத்தில்  - 273707 பேரும்மட்­டக்­­ளப்பு  மாவட்­டத்தில் - 389,582 பேரும்திகா­­டுல்ல  மாவட்­டத்தில் - 493,742 பேரும்திரு­கோ­­மலை மாவட்­டத்தில்  -272822 பேரும்குரு­நாகல் மாவட்­டத்தில்  - 1,315,715 பேரும்புத்­தளம்  மாவட்டத்தில் - 587,683 பேரும், அனுராதபுரம்  மாவட்டத்தில் - 672,161 பேரும்பொலன்னறுவ  மாவட்டத்தில் - 321, 594 பேரும்பதுளை  மாவட்டத்தில் - 649, 472 பேரும்மொனராகலை  மாவட்டத்தில் - 360, 368 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில்  - 852, 473 பேரும், கேகாலை மாவட்டத்தில்  - 669, 570 பேரும் இம்முறை மாவட்ட அடிப்படையில் வாக்களிப்பிற்கு தெரிவாகியுள்ளனர்.   மேலும் தேர்தல் இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள வாக்கா ளர்களின் எண்ணிக்கை 15, 760, 802 பேராக இருந்தாலும்  குறைநிரப்பு இடாப்பில் காணப்படும் வாக்காளர்களின் எண்ணிக்கை 58 பேருடன்  மொத்தமாக  15, 760, 860  பேர் இம்முறை தேர்தலில் வாக்களிக்க தெரிவாகியுள்ளனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages