தமது நாட்டுத் தூதரகத்தை எதிர்வரும் மே மாதம் ஜெருசலேமில் அமைக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தூதரகத்தை நிறுவவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாலஸ்தீனத்திற்கும் ஜெருசலேமிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்பினால் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இஸ்ரேலில் அமெரிக்காவின் தூதரகத்தை அமைக்கவுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது இஸ்ரேல் மக்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக