மரதன் சைக்கிளோட்டம் மற்றும் நீச்சல் போட்டி ஆகிய மூன்று சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டை, கொள்ளுபிட்டிய, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை வரையான பிரதேசங்களில் சில வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை சைத்திய வீதி, காலிமுகத்திடல் மத்திய வீதி, காலி வீதியில் கொள்ளுபிட்டி சந்திவரையான பகுதி, கொள்ளுபிட்டி புகையிரத நிலையம் தொடக்கம் கடற்கரையோர வீதியில் (மெரைன் ட்ரைவ்) வெள்ளவத்தை வரையான பகுதியும் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிகளாகும்.
இன்று அதிகாலை 5மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை குறித்த வீதிகளில் இவ்வாறு வீதிப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக