இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்கள்.
இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு சந்திப்பில் கலந்து கொண்டது.
இதில் சமகால அரசியல் நிலவரம் பற்றியும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதாக திரு.தொண்டமான் கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக