4 ஆயிரம் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-15

4 ஆயிரம் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது


சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் பொலன்னறுவையை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க

 விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க பிரிவு ஊடக பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 
டுபாயிலிருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய குறித்த சந்தேகநபர் சந்தேகத்திற்கிடமான முறையில் வெளியேறுகையிலேயே சுங்கப் பிரிவு பரிசோதனை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச் சம்பவத்தின் போது பொலன்னறுவையை சேர்ந்த 35 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

இவரை தடுத்து விசாரணைக்குட்படுத்திய சுங்க பிரிவு பரிசோதனை அதிகாரிகளால் 205,000 ரூபா பெறுமதிவாய்ந்த 4 ஆயிரத்து 100 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் 25000 ரூபா தண்டபணம் விதித்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் அனைத்து அரசுடைமையாக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages