கிரிபத்கொடையிலுள்ள தனியார் வங்கியில் ஒரு மில்லியன் ரூபா கொள்ளை - Today News

Today News

Today News

Breaking News

W

2018-03-21

கிரிபத்கொடையிலுள்ள தனியார் வங்கியில் ஒரு மில்லியன் ரூபா கொள்ளை


கிரிபத்கொடையிலுள்ள தனியார் வங்கியொன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த ஒருவர் அங்கிருந்து சுமார் ஒரு மில்லியன் ரூபாவை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இன்று பிற்பகல் 1.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வங்கியினுள் நுழைந்த குறித்த நபர் கூரிய ஆயுதமொன்றைக் காட்டி, பணியாளர்களை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages