இலங்கையின் மனித உரிமை
விவகாரம் குறித்த காலக்கிரம மீளாய்வு
தொடர்பான விவாதம் நாளை வெள்ளிக்கிழமை ஐக்கியநாடுகள் மனித உரிமை
பேரவையில் நடைபெறவுள்ளது.
இதில் ஐக்கிய நாடுகள்
மனித உரிமை ஆணையாளர்
செயிட் அல் ஹுசைன் முதலில்
உரையாற்றவுள்ளதுடன் இதன்பின்னர் உறுப்பு நாடுகள் தமது
நிலைப்பாடுகளை
அறிவிக்கவுள்ளன.
அத்துடன் இலங்கையின் சார்பில்
ஜெனிவாவிற்கான
வதிவிடப் பிரதிநிதி இந்த விவாதத்தில்
கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
இதன்போது
இலங்கையானது
2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக செயற்பட வேண்டுமெனவும்
அந்தப் பிரேரணையின்
பரிந்துரைகளை
அமுல்படுத்த வேண்டுமென்றும் ஐ.நா.
மனித உரிமை ஆணையாளர்
செயிட் அல் ஹுசைன் வலியுறுத்தவுள்ளதுடன்
இலங்கை விசேட பொறிமுறையொன்றை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நீதியை
வழங்கவேண்டுமென வலியுறுத்தவிருக்கின்றார்.
அதேபோன்று சர்வதேச
நாடுகளின் பிரதிநிதிகளும்
இலங்கை தொடர்பான இந்த
விவாதத்தில் கலந்து கொண்டு
இலங்கையானது
பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான
நீதியை நிலைநாட்டவேண்டுமென
வலியுறுத்தவுள்ளனர்.
இதேவேளை இந்த விவாதத்தில் கலந்து கொண்டு
உரையாற்றவுள்ள
ஜெனிவாவிற்கான
இலங்கை பிரதிநிதி
இலங்கையானது
கடும் சவால்களுக்கு
மத்தியில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நம்பகரமான முறையில் நீதியை
வழங்க நடவடிக்கை
எடுத்துவருவதாக தெரிவிக்கவிருக்கிறார்.
கடந்த பெப்ரவரிமாதம் 26ஆம்
திகதி ஆரம்பமான
ஜெனிவா மனித உரிமை பேரவை
கூட்டத்தொடர் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இலங்கை தொடர்பான மற்றுமொரு விவாதம் எதிர்வரும் 21ஆம்
திகதி மனித உரிமை பேரவையில்
நடைபெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
Very informative post. I really do hope for this stuff works!
பதிலளிநீக்குsrilanka news live