இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பஸ்ஸில் 40 இற்கும் அதிகமானோர் பயணித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 27 பேர் பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கவுள்ளதாக மாநில முதல்வர் ஜெய் ராம் தாஹூர் அறிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக