பிரான்ஸில் முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது - Today News

Today News

Today News

Breaking News

W

2018-05-02

பிரான்ஸில் முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது


பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபடட் 200 இற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் தினம் நேற்று (01) கொண்டாடப்பட்ட நிலையில் சுமார் 1200 இற்கும் மேற்பட்டவர்கள் முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வர்த்தக நிலையங்களின் யன்னல்களை உடைத்தும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தும் வன்முறையில் ஈடுபட முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமேனுவேல் மெக்ரனின் பொதுச்சேவைக்கான சேவையாளர் உள்ளீர்ப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 இற்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட மோதல்களில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages