பூமியிலிருந்து 180 மில்லியன் மைல் தொலைவிலுள்ள ரயுகு விண்கல்லை சென்றடைந்துள்ள ஜப்பானிய ரோவர் விண்கல உபகரணங்கள், அந்த விண்கல்லின் மேற்பரப்பை பிரதிபலிக்கும் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளன.
தகர கொள்கலம் வடிவிலான மேற்படி ரோபோ விண்கல உபகரணங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக்கருவிகள் மற்றும் உணர்கருவிகள் மூலம் இந்தப் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த இரு ரோபோ விண்கல உபகரணங்களும் எதுவித தடையுமின்றி தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஜப்பானிய விண்வெளி முகவர் நிலையம் தெரிவிக்கிறது.
லின் மேற்பரப்பில் 15 மீற்றர் உயரத்தில் சுமார் 15 நிமிட நேரம் பயணித்து இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளதாக மேற்படி விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் திட்ட முகாமையாளர் யுயிசி தஸுடா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக