துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி - Today News

Today News

Today News

Breaking News

W

2018-09-23

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி


தங்காலை, வாடிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (23) முற்பகல் 11.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

முகத்தினை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தங்காலை - கதிர்காமம் பிரதான வீதியின் வாடிகல பகுதியில் உள்ள மோட்டார் வாகன நிலைமொன்றின் உரிமையாளரான 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages