ஆடையில் தீப்பிடித்ததில் வயோதிபப் பெண் பரிதாபமாக பலி - Today News

Today News

Today News

Breaking News

W

2018-10-01

ஆடையில் தீப்பிடித்ததில் வயோதிபப் பெண் பரிதாபமாக பலி


வெலிமடை பாதினாவெல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சமையலறையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த வயோதிபப் பெண்ணொருவரின் ஆடையில் தீப்பற்றியதில் குறித்த பெண் பரிதாபகரமான முறையில் பலியாகியுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச் சம்பவத்தில் வெலிமடை பாதினாவெல மொரகஸ்பள்ளிய பிரதேசத்தில் வசித்து வந்த 62 வயதுடைய வர்சா மொஹமட் ஹபீ முனீசா என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். 

இவர் நேற்று 30 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் தனது வீட்டில் சமையலறையில் தேநீர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவரது ஆடையில் தீப்பற்றிக் கொண்டதினால் தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளார். 
தீப்பற்றலை தொடர்ந்து அவர் சத்தம் எழுப்பவே காயங்களுக்குள்ளாகியவரை வீட்டினர் அம்பியூலன்ஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

இந்நிலையிலேயே குறித்த நபர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே அம்பியூலன்ஸில் மரணித்துள்ளார். 

இதனையடுத்து குறித்த நபரது சடலமானது வெலிமடை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதோடு நேற்றைய தினம் வெலிமடை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஹேமா அமரகோன் முன்னிலையில் மரண பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக நேற்று மாலை வரையில் வைத்தியசாலையில்  வைக்கப்பட்டிருந்தது. 

மேலும் சம்பவத்தின் போது வீட்டில் மரணித்தவரின் கணவரும், மருமகளுமே காணப்பட்டதாகவும் அவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்தே குறித்த நபரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் மரணித்தவரின் ஆடையில் திடீரென தீப்பற்றிக்கொண்டமையே மரணத்திற்கு காரணமாகவிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவிக்கும் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages