மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பாடசாலை மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை கிடைத்த தகவலுக்கமைய மாணவியின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு பகுதியைச் சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (29) காலை முதல் மாணவியைக் காணவில்லை என அவரின் பெற்றோர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக