ராம் இயக்கத்தில் வெளியான ‘தங்கமீன்கள்’ படத்தில் செல்லம்மா கதாபாத்திரத்தில் நடித்த சாதனா, டயானா விருதை வென்றுள்ளார்.
ராம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தங்கமீன்கள்’.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1KQIebWFnmjAumuR_WaKgORwCaxeQhroNgEteBCkQMMQEdRsl563Jf03eoa8c3uRLnhjlC3TwUYNSrtRMc1D40eABxAkoA_I2coj8L8flXuy3j-Eh8TOsdYOvkxU1VuucsV1xK5TFioOm/s320/pic.jpg)
செல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாதனாவின் நடிப்பு இப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது.
இவர் மீண்டும் ராம் இயக்கத்தில் உருவாகிய பேரன்பு படத்திலும் நடித்திருக்கிறார். இப்படம் பல்வேறு விருதுகளுக்கு தெரிவாகியுள்ளது.
இந்நிலையில் சாதனா, சமூக மேம்பாட்டிற்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான டயானா விருதை வென்றிருக்கிறார்.
இதனை இயக்குனர் ராம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக