ஆற்றுக்குள் கவிழ்ந்தது பஸ் : 27 பேர் பலி - Today News

Today News

Today News

Breaking News

W

2017-12-23

ஆற்றுக்குள் கவிழ்ந்தது பஸ் : 27 பேர் பலி

ஆற்றுக்குள் கவிழ்ந்தது பஸ் : 27 பேர் பலி




இராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.

இராஜஸ்தான் மாநிலம் சபாய் சவாய் மதோபூர் நகரில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் லால்கோட் நோக்கி பஸ் புறப்பட்டு வந்தது. 

துபி என்ற இடத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் வந்தபோது பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.


பின்னர் பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றிற்குள் விழுந்தது. இதனால் பஸ் தண்ணீரில் மூழ்கியது.  உள்ளே இருந்த பயணிகள் தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடினர். 

தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்ஸில் கயிறு கட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியே இழுத்தனர். 

இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சிலர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages