சாரதிகளே அவதானம் ! கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்
சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வருவதற்காரணமாக கொழும்பிலுள்ள சில வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொழும்பு - கோட்டை மத்திய வீதி வரை , பிற்பகல் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
களனி பாலம் , பேஸ்லைன் வீதி , ஒருகொடவத்தை சந்தி , பொரளை சந்தி , டீ.எஸ் சேனாநாயக்க சந்தி , மல் வீதி சந்தி , லிபர்ட்டி சுற்றுவட்டம் , காலி முகத்திடல் சுற்றுவட்டம் , காலி முகத்திடல் மத்திய வீதி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இன்று பிற்பகல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர் இம்மாதம் 24 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக