விளையாட்டுத்துறை அமைச்சின் 44 வது தேசிய விளையாட்டு விழா இன்று நுவரெலியா பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது நிகழ்ச்சியாக மரதன் ஓட்ட போட்டி இடம்பெறவுள்ளது.
நுவரெலியா பொலிஸ் விளையாட்டரங்கில் இருந்து இன்று காலை 6.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகும்.
தேசிய விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு இணைவாக, மாகாணங்கள் தோறும் இது தொடர்பான பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மரதன் ஓட்டப் போட்டியில் தேசிய ரீதியில் திறமை காட்டிய 10 வீரர்களும், 6 வீராங்கனைகளும் உட்பட மரதன் ஓட்டப் போட்டியில் 154 பேர் பங்கேற்கின்றனர்.
2018ம் ஆண்டில் மரதன் ஓட்டப் போட்டியில் வெற்றி பெறும் வீர, வீராங்கனைகளுக்கு அடுத்த மாதம் 15ம் திகதி பூட்டானில் ஆரம்பமாகும் முதலாவது தெற்காசிய மரதன் ஓட்டப் போட்டியிலும், அடுத்த மாதம் 25ம் திகதி சீனாவில் இடம்பெறும் போட்டி நிகழ்விலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டுமென்று விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக