இலங்கை கடற்பரப்பில் நேற்று அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வழக்குப்பதிவு செய்து இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது தமிழக மீனவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய் மகிழ் மகாதேவா தீபாவளியை கருத்தில் கொண்டு மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த ஊர்காவல்த்துறை நீதிபதி ஜூட்சன் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக