அதன் மீது தவறி விழுந்த பாலகன் ஒருவனின் வாயினூடாக அவனது மூளை வரை துளைத்துச் சென்ற விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மேற்படி சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஹுனான் மாகாணத்திலுள்ள ஹென்யாங் பிராந்தியத்தைச் சேர்ந்த யாங் யாங் என்ற இரண்டு வயதை எட்டாத பாலகனே தனது வீட்டைச் சுற்றி ஓடி விளையாடிய வேளையில் கால் தடுமாறி அங்கு வீசப்பட்டிருந்த குச்சியொன்றின் மீது விழுந்துள்ளான்.
இதனையடுத்து செக்கன்ட் ஸயன்கையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவனுக்கு அங்குள்ள மருத்துவர்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் இரவோடிரவாக துரித சத்திரசிகிச்ையை மேற்கொண்டு குச்சியை அகற்றியுள்ளனர்.
தற்போது அந்தப் பாலகனது உடல் நிலை யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் அவன் மேலும் பல தினங்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது.
குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்கள் நடமாடும் இடங்களிலுள்ள பொருட்களால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய உயிராபத்துக் குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டிய அவசியம் தொடர்பில் பெற்றோருக்கு
ஒரு எச்சரிக்கையாக மேற் படி சம்பவம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக