Share
ரயில்வே திணைக்கள பயணச்சீட்டு பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளின்போது, ரயில்வே சட்டதிட்டங்களுக்கு மாற்றமான முறையில் ரயில்களில் பிரயாணம் செய்த பலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 20 மில்லியன் ரூபாவை அபராதத் தொகையாகத் திரட்ட முடிந்ததாக, ரயில்வே வாணிப அத்தியட்சகர் ஜீ.டபிள்யூ. சிசிர குமார தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதிப் பகுதி வரை கொழும்பு உள்ளிட்ட பல்வேறு ரயில்வே வலயங்களில் 14809 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தொடர்ந்தும் இவ்வாண்டும் திடீர்ப் பரிசோதனைகள் விரிவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிக்கட் வாங்காமல் பயணித்தமை, மூன்றாம் வகுப்பு டிக்கட்டுக்களுடன் முதலாம், இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் பயணித்தமை, டிக்கட்டில் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் பயணித்தமை போன்ற குற்றங்களுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டு குறித்த அபராதத் தொகை பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்கள வருமானத்தைப் பெருக்கும் நோக்கில், ரயில்வே அபராதத் தொகைகளும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. 2,500 ரூபாவாக இருந்த அபராதம், 3 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே வாணிப அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக