Share
இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டியில் விராட் கோஹ்லி விருப்பப்பட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று இந்திய கிரிக் கெட் சபை அறிவித்துள்ளது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாபிரிக்காவில் விளையாடி வருகிறது.
எதிர்வரும் 24ஆம் திகதியுடன் இத் தொடர் முடிகிறது.
அடுத்து இந்திய அணி இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.
இத் தொடரிலிருந்து இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி விலகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் அவர் ஓய்வு கேட்கவுள்ளாராம்.
இந் நிலையில் இலங்கை தொடரில் கோஹ்லி விருப்பப்பட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படுமன இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சபை நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
கோஹ்லி ஓய்வு பெற விரும்பினால் அவருக்கு ஓய்வளிக்கப்படும். விளையாடுவதா, வேண்டாமா என்பது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாண்டு இதுதான் கடைசி தொடர் என்பதால் அவர் விளையாடவே விரும்பலாம். இதன்பிறகு ஐ.பி.எல். போட்டி தான் இருக்கிறது என்று கூறி யுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக