ஜாக்குலின் பெர்னாண்டஸூடன் இனி சேர்ந்து நடிக்க மாட்டேன்: டாப்சி - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-04

ஜாக்குலின் பெர்னாண்டஸூடன் இனி சேர்ந்து நடிக்க மாட்டேன்: டாப்சி


ஜாக்குலின் பெர்னாண்டஸூடன் இனி சேர்ந்து நடிக்க மாட்டேன்: டாப்சி


தமிழ், தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து பொலிவுட் பக்கம் சென்றிருக்கும் நடிகை டாப்சி ‘ஜூட்வா-2’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ஜாக்குலின் பெர்னாண்டஸூடன் இனி நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

இந்தி நடிகர் வருண் தவான் இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘ஜூட்வா-2’. இதில் டாப்சியும், ஜாக்குலின் பெர்னாண்டஸூம் சேர்ந்து நடித்தார்கள். 

இந்த படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

அப்போது, ‘தயாரிப்பாளருடன் டாப்சி நெருக்கமாக இருக்கிறார். இதனால் அவருக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது’ என்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாப்சியிடம், ”இனி எந்த நடிகையுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க மாட்டீர்கள்?” என்று கேட்கப்பட்டது. இதற்கு டாப்சி, “ஜாக்குலின் பெர்னாண்டஸ்” என்று பதிலளித்தார்.

உடனே ‘ஜாக்குலினா?’ என்று அடுத்த கேள்வி கேட்க, சுதாரித்துக்கொண்ட டாப்சி, “ஏற்கனவே நாங்கள் சேர்ந்து நடித்து விட்டோம். 

அவர் உடலை ‘சிக்’ என்று வைத்திருப்பதை பார்த்து பொறாமையாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்.

‘தன்னைப்பற்றி குறை கூறிய ஜாக்குலின் பெர்னாண்டஸூக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் டாப்சி இப்படி கூறியுள்ளார்’ என்று இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages