நாச்சியார் வசன சர்ச்சை: நடிகர்கள் எப்படிப் பேசினாலும் பிரச்சினை வராது – ஜோதிகா - Today News

Today News

Today News

Breaking News

W

2018-02-08

நாச்சியார் வசன சர்ச்சை: நடிகர்கள் எப்படிப் பேசினாலும் பிரச்சினை வராது – ஜோதிகா


நாச்சியார் பட வசனம் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்த நிலையில், அது பற்றி ஜோதிகா கருத்து வௌியிட்டுள்ளார்.

அந்த வார்த்தையை ஒரு நடிகை பேசியதால் தான் பெரும் சர்ச்சையானது எனவும் நடிகர்கள் யாராவது பேசியிருந்தால் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள் என்றும் ஜோதிகா கூறியுள்ளார்.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் ‘நாச்சியார்’.

இதில் ஜோதிகா பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ‘டீசர்’ சமீபத்தில் வெளியானது. அதில் ஜோதிகாவின் ஆவேசமான வசனக்காட்சி இடம்பெற்றது.

இந்த காட்சியில் ஜோதிகா பேசிய ஒரு வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

‘பெண்களை அவமதிக்கும் வார்த்தையை பேசிவிட்டார்’ என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

ஜோதிகா பேசிய அந்த ஒரே வார்த்தை ‘நாச்சியார்’ படத்திற்கு விளம்பரமாகவும் அமைந்தது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில்,

”ஒரு நடிகை அந்த வார்த்தையைப் பேசியதால் தான் பெரும் சர்ச்சையானது. அதையே நடிகர் யாராவது பேசி இருந்தால் யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். 

டீசரைப் பார்த்துவிட்டு எனது பாத்திரம் குறித்து ஒரு முடிவுக்கு வராதீர்கள். 

படத்தைப் பார்த்துவிட்டு பேசுங்கள். படத்தில் எனது கதாப்பாத்திரம், கதையின் சூழல் காரணமாக அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. 

படம் பார்த்தால் அதில் நான் பேசிய வார்த்தை சரியானது தான் என்பது ரசிகர்களுக்குப் புரியும்”

என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages