கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து தற்போது நிலைமை வழமைக்குத் திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வன்முறைச் சம்பவத்தையடுத்து அங்கு ஏற்பட்ட தீயில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0QVkCpHJb2tkc3zADLXvPc13u-ja0Eo1Sk8-g9ysC_yDrSuQLn9lChfk1afF0lntJ9WTAF2R4GTC98UW9Oz8c7cOmgnOU50UI4aKjAOZM88P9gvDu2QJF6RPz3u5f8ALpmiF6DM30Dwmg/s1600/28721614_10209141249443073_112903336_n.jpg)
நேற்று நண்பகலில் இருந்து மெதுவாக ஆரம்பித்த வன்முறைச் சம்பவங்கள் மாலையாகும் போது பலத்த வன்முறையாக மாறியதாகவும் பின்னர் அங்கு பெய்த கடும் மழையையடுத்த ஓரளவு தணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றிரவு சிறு சிறு கல்வீச்சுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் 100 க்கும் மேற்பட்ட கடைகளும் உடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியை அமைச்சர்கள் நேரில் வந்து பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzRf9R7K9hSoUaPUFRHTOvYgcQR7B4_ynrHau8sWutOMrOL9W2zYfd7QnE2fdH2LYeYWpo2jxueUR2p7Z3YvCZEHDq4_989n0NZB9TFpuw-M9xlwUGlMBGPPBqTNvCaKqoBrkNOu1xwmDk/s1600/28576775_1970699213142770_1848920759593256046_n.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக