பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை - Today News

Today News

Today News

Breaking News

W

2018-04-04

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை


பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு தொடர்பில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக 1800 பொலிஸார் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஒரு பிரிவினர் சிவில் உடையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படவுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு வருகை தந்து கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் இவர்கள் அதிக அவதானம் செலுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பில் 900 பொலிஸார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages