ஜுன் 23 ஆம் திகதி இடம்பெறும் தேசிய வீடமைப்பு தினத்தை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொடி வாரத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அணிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதிக்கு கொடி அணிவிக்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஸ்தாபகரான காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பிறந்த தினமான ஜுன் மாதம் 23ஆம் திகதி தேசிய வீடமைப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக