Share
பேருவளை – பன்னில பகுதியில் இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பெண்கள் உட்பட 11 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது துப்பாக்கிச் சூட்டுக்கிலாக்கான முங்ஹேன பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிளைத் திருடுவதற்காக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பயன்படுத்தப்பட்ட ரி–56 ரக துப்பாக்கி, 27 தோட்டாக்களுடன் கூடிய மெகஸின், துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்த கார் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக