இலங்கை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-10-07

இலங்கை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்



Share
அர­பிக்­­டலில் உரு­வா­கி­யுள்ள தாழ­முக்க வலயம் இலங்­கையை நோக்கி நகர்ந்து வரு­வதால் அடுத்த 36 மணி நேரத்­துக்கு நாட்டில் கடும் காற்று, இடி மின்­­லுடன் கூடிய மழை பெய்யுமென வளி­மண்­­­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது
இலங்­கையின் வடமேல் மாகா­ணத்தை நோக்கி நகர்ந்து வரும் தாழ­முக்க வல­யத்­தினால் குறித்த பிர­தே­சங்­களில் புயல்­காற்று வீசும் சாத்­தியம் இருப்­­தா­கவும் வளி­மண்­­­வியல் திணைக்­களம் எச்­­ரித்­துள்­ளது
அந்த வகையில் அடுத்த 36 மணித்­தி­யா­லங்­களில் வடமேல் மாகாணம், மத்­திய மாகாணம், வட­மத்­திய மாகாணம், ஊவா மாகாணம், மேல்­மா­காணம் மற்றும் சப்­­­முவ மாகா­ணங்­களில் 150 மில்­லி­மீற்­­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி பதி­வாகும்
அதே­வேளை வட­மத்­திய மாகாணம் மற்றும் தெற்கு மாகா­ணங்­களில் 100 மில்­லி­மீற்­­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி பதி­வா­கலாம்.  
இந்தத் தாழ­முக்­கத்தின் கார­­மாக மன்­னா­ரி­லி­ருந்து புத்­தளம், கொழும்பு, காலி, மாத்­தறை மற்றும் ஹம்­பாந்­தோட்டை கடற்­பு­றங்­களில் கடும் காற்றும் இடி­யுடன் கூடிய மழையும் பெய்யும்
இவ்­வாறு இடி­யுடன் கூடிய மழை­பெய்யும் போது மணிக்கு 70-–80 கிலோ­மீற்றர் வேகத்­திலும் அல்­லது அதை விட அதி­­மா­கவும் காற்று வீசலாம். இதனால் கடலில் அலை­களின் உய­ரமும் அதி­­ரிப்­­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன
களுத்­து­றை­யி­லி­ருந்து காலி, ஹம்­பாந்­தோட்டை மற்றும் பொத்­துவில் வரை­யான கட­லோ­ரங்­களில் எதிர்­வரும் நாட்­களில் கட­­லை­களின் உயரம் 2-2.5 மீற்றர் வரை உயரும் சாத்­தியம் இருக்­கின்­றது. இந்த உய­ரத்­தினால் கட­­லைகள் வீதிக்கு வரா­விட்­டாலும் இந்த அலை­களின் உயரம் மேலும் உய­ரக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் இருக்­கின்­றன.
இதனால் கடலில் மீன்­பி­டிக்கச் செல்லும் மீன­வர்கள் இது தொடர்பில் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் வளி­மண்­­­வியல் திணைக்­களம் எச்­­ரித்­துள்­ளது.
மேலும், நாட்டின் பல பாகங்­களில் இடி மின்னல் தாக்­கங்கள் அதி­­மாக இருக்கும். அதனால் பொது­மக்கள் திறந்த இடங்­­ளிலோ, மைதா­னங்­­ளிலோ, வயல்­வெ­ளி­­ளிலோ, தோட்­டங்­­ளிலோ அல்­லது மரங்­­ளுக்கு கீழேயோ இருப்­பதைத் தவிர்த்து பாது­காப்­பான இடங்­களில் இருக்­­வேண்டும்
இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் கைத்­தொ­லை­பேசி பாவ­னை­களை தவிர்த்­துக்­கொள்ளும் அதே­வேளை ஒரு­சில இலத்­தி­­னியல் உப­­­ணங்­களின் பாவ­னை­­ளையும் தவிர்க்­­வேண்டும்
சைக்கிள், மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளும் அதேவேளை நீர்த்தேக்கங்களின் அருகில் இருக் கும்போதும் அவதானத்துடன் இருக்கவேண்டு மென்று வளிமண் டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages