பொலிஸாரின் இடமாற்றங்கள் இடைநிறுத்தம்
அனைத்து பொலிஸ் அதிகாரிகளினது இடமாற்றங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பணிப்புரை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமையினாலேயே குறித்த இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjv-f9V9qCR4i3cH8KdiA6rgyUz1OzljMlKTiVsKv54_qJCSWeV6z9LJiNeKcE9ZPCfErQDmYV3U7OPVpQi1tlHVrtiqUaxFu5iO6MFTWResXBKTdhOhbOBnBtx5XlnNZT_vEsOIXQew7qi/s1600/download.jpg)
மேற்படி உத்தரவு கடந்த எட்டாம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அதற்கிணங்க வருடாந்த இடமாற்றம் உட்பட சகல இடமாற்றங்களும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக