மீண்டும் முதலிடத்தில் சி.எஸ்.கே - Today News

Today News

Today News

Breaking News

W

2018-05-02

மீண்டும் முதலிடத்தில் சி.எஸ்.கே



மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தனதாக்கிக் கொண்டது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் இன் 11 தொடர் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றுவருகின்றது.

 நேற்றைய தினம் (30) நடந்த 30ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வழமைப் போல் திரில் வெற்றியை பதிவுசெய்தது. புனேயில் இடம் பெற்ற நேற்றையப் போட்யில் டெல்லி அணியும் சென்னை அணியும்

கலமிரங்கின. நாணயச்சுழட்சியில் வெற்றிப் பெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பாட்டதிதில் இரங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. 

இதில் ரய்னா ஒரு ஓட்டத்தோடு ஆட்டமிழந்தார், டுபிளாசி 33, ஷேன்ஒட்சன் 7, ஆறு ஓட்டங்களுடன் 78, ஓட்டங்களுடனும் ராயிடு 41, டோனி 22, பந்துகளில் 5 ஆறு ஓட்டம் அடங்களாக 51 ஓட்டங்களை எடுத்தார்.

20 ஓவர்களில் 212 ஓட்ட இலக்குடன் டெல்லி, டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. காலின், முன்ரோ 26, பிருத்வி ஷா 9 , ஸ்ரேயாஸ் ஐயர், 13, கிளென் மேக்ஸ்வெல் 6 ஓட்டங்களுக்கு  ஆட்டமிழந்தனர்.

முக்கியமான கட்டத்தில் ரிஷப் பந்த் 45, பந்துகளில் 79 ஓட்டங்கள் எடுத்தார். விஜய் சங்கர் 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54, ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை போராடினார். 

கடைசி ஓவரில் 28ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது. லுங்கி நிகாடி வீசிய அந்த ஓவரில் 4 பந்துகளில் 2 0ஓட்டங்கள் 3, பந்துகளில் 17 ஓட்டங்கள் என்று மாறியது.

 இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு டெல்லி 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. சி.எஸ்.கே .13ஓட்டங்களால் வென்றது. 

இதன்
மூலம் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages