இந்தோனேசியாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள சுலசேசி தீவில் நேற்று ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384ஆக அதிகரித்துள்ளது.
இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையிலும் பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் இனைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று ஏற்பட்ட இச் சுனாமி தாக்கத்தை தொடர்ந்து பலு விமானநிலையம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக