படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி - Today News

Today News

Today News

Breaking News

W

2019-03-21

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி


Shareயாழ். மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மண்டைதீவை சேர்ந்த ஜோன் அன்ரனி டினேஷ் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த இளைஞன் நேற்று புதன்கிழமை கடற்தொழிளுக்காக படகில் தனது நண்பருடன் சென்று கடற்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த வேளை கடல் காற்றின் வேகம் அதிகரித்தமையால் படகு கவிழ்ந்துள்ளது. 

அதனால் படகிலிருந்த இரு இளைஞர்களும் கடலில் நீந்தி கரை திரும்ப முற்பட்ட போதிலும் , ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மற்றையவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார். 

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் சடலத்தை சக மீனவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages