இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 149 ஓட்டங்களை குவித்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று வருகிறது.
அதன்படி முதலாவதாக ஆரம்பமாகியுள்ள இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி கடந்த 15 ஆம் திகதி தர்மசாலாவில் நடைபெறவிருந்தது.
எனினும் தொடர் மழை காரணமாக நாணய சுழற்சிக் கூட மேற்கொள்ளப்படாது போட்டி கைவிடப்பட்டது.
இந் நிலையில் இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு மொஹாலியில் ஆரம்பமான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வுசெய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.
இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 150 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஹெண்ரிக்ஸ் 6 ஓட்டத்துடனும், டீகொக் 37 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 52 ஓட்டத்துடனும், பவுமா 49 ஓட்டத்துடனும், வான்டெர் டூஸன் ஒரு ஓட்டத்துடனும், டேவிட் மில்லர் 18 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் ஆடுகளத்தில் பெலக்வாயோ 8 ஓட்டத்துடனும், பிரிட்டோரியஸ் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் தீபக் சஹார் 2 விக்கெட்டுக்களையும், சைனி, ஜடேஜா மற்றும் பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக