எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு என சிகிரியாவைத் திறப்பதற்கு மத்திய கலாசார நிதியம் தீர்மானித்துள்ளது.
உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூரிய உதயத்தைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் நோக்கமாகும் என மத்திய கலாசார நிதியத்தின் சிகிரியா திட்ட முகாமையாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுலாத் தினத்தன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகாலை 5 மணி தொடக்கம் சிகிரியாவில் சூரியோதயத்தைப் பார்வையிடுவதற்கான அனுமதிச்சீட்டு விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக