முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரிற்கு வீடுகளிற்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளிற்கு அனுப்பப்படும் பொருட்களை சோதனையிட்ட அதிகாரியொருவர் இதனை கண்டுபிடித்துள்ளார்.
ஓக்டோபர் 23 ம் திகதி ஹிலாரி கிளின்டனிற்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு பிரிவொன்று தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் 24 ம் அதிகாலை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வீட்டிற்கு இனந்தெரியாதவர்கள் அனுப்பிய வெடிபொருள் பொதி கண்டுபிடிக்கப்பட்டது எனவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட முகவரியை அவை சென்றடையும் முன்னர் அவற்றை கண்டுபிடித்துவிட்டோம் முன்னாள் ஜனாதிபதியோ வெளிவிவகார அமைச்சரோ குறிப்பிட்ட பொருட்களை பெறவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்பிஐ அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளதுடன் விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக