மூளை வளர்ச்சி குன்றிய சிறுமிக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்த பெற்றோர் - Today News

Today News

Today News

Breaking News

W

2018-10-08

மூளை வளர்ச்சி குன்றிய சிறுமிக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்த பெற்றோர்


Share
இந்தியா, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வாழைக்குளத்தை சேர்ந்த என்ஜினீயர் முனீஸ்வரன். இவரது மனைவி ரேவதி. இவரும் பொறியியலாளர்களாக பணியாற்றி வருகிறனர்.

இவர்களது மகள் சாதனா (வயது 9). மூளை வளர்ச்சி குன்றிய சாதனாவை பல வைத்தியலர்களிடம் காண்பித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் மகள் படும் துயரத்தை கண்டு முனீஸ்வரன்- ரேவதி விரக்தியில் இருந்தனர்.

இதையடுத்து அவர்கள் மகளை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கடந்த முதலாம் திகதி  சாதனாவை நாகபாளையத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று. 

அங்கு கடவுளை பிரார்தித்த பின்னர் இருவரும் மனதை கல்லாக்கி கொண்டு சாதனாவுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தனர்.

இதை சாப்பிட்ட சாதனா சிறிது நேரத்தில் மயங்கினாள். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விசாரித்தபோது சிறுமிக்கு விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது.

உடனே அவர்கள் சாதனாவை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சாதனா.

 சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தாள்.

இதுகுறித்து மல்லி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர். 

மூளை வளர்ச்சி குன்றிய மகளை பெற்றோரே கொலை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages