இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவார்கள் அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார்.
காலி மைதானம் எப்போதும் சுழற்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமானது பந்து சுழலும் என தெரிவித்துள்ள சந்திமல் இலங்கையில் விளையாடும்போது சுழற்பந்து வீச்சாளர்களே அணியின் வெற்றிக்கான பொறுப்பை எடுப்பது வழமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தை வெற்றியுடன் வழியனுப்பிவைக்க எண்ணியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அதனை தற்போது வெளிப்படுத்த விரும்பவில்லை அவரிற்கு சில ஆச்சரியங்களை வைத்துள்ளோம் எனவும் தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார்.
முதலாவது டெஸ்டையும் தொடரையும் எங்களால் வெல்ல முடியுமென்றால் அது ரங்கன ஹேரத்திற்கான சிறந்த பிரியாவிடையாக அமையும் எனவும் தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக