முன்னாள் உலக சம்பியனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை - Today News

Today News

Today News

Breaking News

W

2019-01-01

முன்னாள் உலக சம்பியனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை


முன்னாள் இருபதுக்கு - 20 உலகக் கிண்ண சம்பியன்களான இலங்கை அணி, உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்க வேண்டுமாயின் தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

16 அணிகள் பங்குகொள்ளும் 2020 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Pages