புல்மோட்டை, கொக்கிளாய் களப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினம் (21) வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவினால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, புத்தளம் மற்றும் கொக்கிளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20, 34, 27, 30 வயதுகளையுடைய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களிடமிருந்து டிங்கி படகொன்று, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள குறித்த மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக மீன்பிடித் திணைக்கள குச்சவெளி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக